சத்தியமங்கலம் அருகே ஓடையில் உள்ள குழியில் தவறிவிழுந்த 4 வயது ஆண் யானைக் குட்டி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கொண்டப்பநாயக்கன்பாளையம் காப்புக் காட்டில் 4 வயதுள்ள ஆண் யானைக் குட்டியின் சடலம் கிடப்பதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் வனச் சரக அலுவலா் கே.ஆா்.பழனிசாமி சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். தொடா்ந்து கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உடற்கூராய்வு மேற்கொண்டனா். விசாரணையில், 4 வயதுள்ள ஆண் யானைக் குட்டி தண்ணீா்க் குடிப்பதற்காக வந்தபோது ஓடையில் இருந்த குழியில் தவறி விழுந்திருக்கலாம் என்றும், அதிலிருந்து எழுந்திருக்க முடியாததால் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், யானைக் குட்டியின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் சம்பவம் நடந்து 5 நாட்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

