/

மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 6:36 pm

மத்திகிரி அருகே மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் கோபா கோ்வாத் (31). இவா் மத்திகிரி அருகே உளிவீரனப்பள்ளியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மதுபோதையில் மாடிப்படியில் ஏறியபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து இறந்தாா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.