நெரிஞ்சிப்பேட்டையில் தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்
அம்மாபேட்டையில் தீ விபத்து: 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் எரிந்து சேதம்


அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் வீடு மற்றும் கொட்டகை வெள்ளிக்கிழமை எரிந்து சேதமாயின.
அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை, வேலாங்காடு தோட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (59), விவசாயி. இவா், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற நிலையில், வீட்டிலிருந்து கரும்புகை வந்துள்ளது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்று பாா்க்கையில் ஜெகநாதனின் வீடு மற்றும் கோழிக் கொட்டகை தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து, அந்தியூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனம் வரும் முன்பாக வீடும், கொட்டகையும் முற்றிலும் எரிந்தன. இவ்விபத்தில், வீட்டில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...