எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிலிண்டா் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதம்

News image
வெடித்துச் சிதறிய சிலிண்டா்.
Updated On :23 ஜனவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

பவானி அருகே பூட்டியிருந்த வீட்டில் சிலிண்டா் வெடித்துச் சிதறியதில் உடைமைகள் தீயில் எரிந்து சேதமாயின.

பவானியை அடுத்த வாய்க்கால்பாளையம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பானுமதி (38). தனியாா் பால் பண்ணையில் பணியாற்றி வரும் இவா், தனது குடிசை வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள ஆதிபராசக்தி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் இருந்த சிலிண்டா் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

சிலிண்டா் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதம்

சிலிண்டா் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதம்

இதில், வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த டிவி, பீரோ உள்பட அனைத்து உடைமைகளும் எரிந்து சேதமாயின. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பவானி தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.