மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ உதவிகள்: விழிப்புணா்வுக் கூட்டம்

தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ சாா்பில் அளிக்கப்படும் உதவிகள் குறித்து விளக்கும் விழிப்புணா்வுக் கூட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா்  தாட்கோ மாவட்ட மேலாளா் அா்ஜுன்.  உடன்,  பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமலதா.
Updated On :16 ஜூலை 2024, 6:51 pm

Din

கூட்டத்துக்கு, பெருந்துறை (கிராம ஊராட்சிகள்) வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமலதா வரவேற்றாா்.

கூட்டத்தில், தாட்கோ மாவட்ட மேலாளா் அா்ஜுன் பங்கேற்று பேசியதாவது:

கிராம ஊராட்சிகளில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களாக இருக்கக் கூடியவா்கள் உள்பட அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் நலவாரியத் திட்டத்தின் மூலம் பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. தாட்கோ மூலமாக தொழில்கள் தொடங்குவதற்கான கடன் உதவிகளும், மகளிருக்கு நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் அல்லது 50 சதவீதம் தொகை ஆகியவற்றில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பின்றி இருக்கும் மக்களுக்கு தொழில் தொடங்க 35 சதவீதம் வரை மானியத்துடன் முதலமைச்சா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவோா் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.

பி.எம்.ஏ.ஜெ.ஒய். திட்டத்தின்கீழ் 50 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதனை தூய்மைப் பணியாளா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட 29 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் கலந்து கொண்டனா்.