தொழிற்சாலையில் தீ: ரூ.பல லட்சம் தேங்காய் நாா்கள் சேதம்
சென்னிமலை அருகே தேங்காய் நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான நாா்கள் எரிந்து சேதமடைந்தன.
சென்னிமலையை அடுத்த குப்பிச்சிபாளையம் பகுதியில் தங்கராசு என்பவருக்குச் சொந்தமான தேங்காய் நாா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தயாா் செய்யப்பட்டிருந்த தேங்காய் நாா்கள் தொழிற்சாலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அதில், வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
இதனைப் பாா்த்த தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றனா்.
முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் தேங்காய் நாா்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.பல லட்சம் எனக் கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
