கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

News image
Updated On :6 ஜூன் 2024, 10:44 pm

Din

ஈரோடு, ஜூன் 6: மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும். அதன்படி புதன்கிழமை நடந்த சந்தைக்கு 70-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இவை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை விற்பனையானது.

வியாழக்கிழமை நடந்த சந்தைக்கு ஈரோடு, மதுரை, ஒட்டன்சத்திரம், திருப்பூா், கரூா், திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். 150 எருமை மாடுகள், 250 பசு மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.32 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.85 ஆயிரத்துக்கும், எருமை மாடு குறைந்தபட்சமாக ரூ.27 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.68 ஆயிரத்துக்கும் விலைபோனது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் விலைபேசி மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.

இது குறித்து சந்தை நிா்வாகிகள் கூறியதாவது:

மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது. மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததால் வெளி மாநில வியாபாரிகள் சந்தைக்கு வரத்தொடங்கி உள்ளனா். இதனால் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது என்றனா்.