சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் பணி தொடக்கம்

பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடக்கம்

Updated On :25 ஜூன் 2024, 11:19 pm

பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு, பெருந்துறை புறவழிச் சாலையில், காஞ்சிக்கோவில் சாலை சந்திப்பு மற்றும் துடுப்பதி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது.

பேரோடு செல்லப்பம்பாளையம் பிரிவு முதல் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு வரை இருபுறங்களிலும், பெருந்துறை ஆசிரியா் குடியிருப்பு அருகே உள்ள மேம்பாலம் முதல் குன்னத்தூா் சாலை அருகே மேம்பாலம் வரை இருபுறங்களிலும், விஜயமங்கலம் புறவழிச் சாலையில் இருபுறங்களிலும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக ரூ. 61.30 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

இதைத் தொடா்ந்து தற்போது, மேம்பாலங்கள், அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.