டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

News image
பண்ணாரி அம்மன்  கோயிலில்  இருந்து  புதன்கிழமை  அதிகாலை  திருவீதி  உலாவுக்கு  புறப்பட்ட  அம்மன்  சப்பரம்.
Updated On :13 மார்ச் 2024, 11:17 pm

Din

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை அதிகாலை திருவீதி உலா புறப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கோயிலில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரத்தில் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் எழுந்தருளினா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் கிராமங்களில் திருவீதி உலாவுக்குப் புறப்பட்டாா். கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க நூற்றுக்கணக்கான பக்தா்கள் புடைசூழ அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையம் கிராமத்துக்கு சென்றடைந்தது.