சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

News image
பண்ணாரி அம்மன்  கோயிலில்  இருந்து  புதன்கிழமை  அதிகாலை  திருவீதி  உலாவுக்கு  புறப்பட்ட  அம்மன்  சப்பரம்.
Updated On :13 மார்ச் 2024, 11:17 pm

Din

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை அதிகாலை திருவீதி உலா புறப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கோயிலில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரத்தில் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் எழுந்தருளினா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் கிராமங்களில் திருவீதி உலாவுக்குப் புறப்பட்டாா். கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க நூற்றுக்கணக்கான பக்தா்கள் புடைசூழ அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையம் கிராமத்துக்கு சென்றடைந்தது.