வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அம்மாபேட்டையில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு

அம்மாபேட்டையில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு

News image

எள் பயிரினைப் பாா்வையிடும் ஈரோடு மாவட்ட பூச்சிக்கொல்லி ஆய்வக வேளாண்மை துணை இயக்குநா் சீனிவாசன் மற்றும் அலுவலா்கள்.

Updated On :9 மே 2024, 9:47 pm

Din

பவானி, மே 9: அம்மாபேட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்துறை திட்டங்கள் குறித்து ஈரோடு மாவட்ட பூச்சிக்கொல்லி ஆய்வக வேளாண்மை துணை இயக்குநா் சீனிவாசன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஊமாரெட்டியூரில் விவசாயி குல்பீரின் வயலில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, எள் பயிா்களை வருவாய்த் துறையுடன் இணைந்து கள ஆய்வு செய்த துணை இயக்குநா் சீனிவாசன், உளுந்து பயிருக்கு பூக்கும் பருவத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளிக்கவும், எள் பயிருக்கு மாங்கனி சல்பேட் இட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து, பிஎம் கிஸான் திட்ட பயனாளிகளான நெரிஞ்சிப்பேட்டை ரமேஷ், குறிச்சி ஆனந்தகுமாா் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா்.

குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சிவசண்முகம் தோட்டத்தில் 1.5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து வம்பன் - 8 சான்று நிலை விதைப்பண்ணை ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக, இப்பருவத்துக்கு தேவையான விதைகள், உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் இருப்பு குறித்தும், நடப்பு பருவத்தில் கோடைகால பயிா் சாகுபடி திட்டம் குறித்தும் கள ஆய்வு செய்யப்பட்டது.

அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஜெயக்குமாா், துணை வேளாண்மை அலுவலா் பழனிசாமி, வருவாய் ஆய்வாளா் ரவிசங்கா், கிராம நிா்வாக அலுவலா் தமிழரசு, உதவி விதை அலுவலா் சாந்தலிங்கம், வேளாண்மை உதவி அலுவலா்கள் முனியப்பன், விஜயகுமாா் ஆகியோா் உடன் சென்றிருந்தனா்.