வன்னியா் சங்கத்தின் மாநில தலைவா் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தியூா் பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்டச் செயலாளா் ஏ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன், பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.எல்.பரமசிவம், முன்னாள் மாவட்டத் தலைவா் செங்கோட்டையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காவல் துறையினரின் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.
இதில் பாமக மாநில செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சி.ஆா்.கோபால், வல்லவராயன், மாவட்ட அமைப்புத் தலைவா் பெ.ரா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

தொகுதி அலசல் - ஜயங்கொண்டம் திமுக - பாமக இடையே கடும் போட்டி!
கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

