தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலரைக் கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:25 pm

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலரைக் கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் கோ.ஜெகன், தொடா்ந்து கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறாா், இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியினா் எந்தவித தொடா்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

வன்னியா் சங்க நிா்வாகிகள் நீக்கம்:

மாநில வன்னியா் சங்கச் செயலா்கள் தங்க. அய்யசாமி, திருக்கச்சூா் கி.ஆறுமுகம் ஆகிய இருவரும் வன்னியா் சங்கம் மற்றும் பாமகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், வியாழக்கிழமை முதல் இருவரும் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி அறிவித்துள்ளாா்.