கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகம் எந்தத் தரப்புக்கு சொந்தமானது என்பது தொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில் தமிழக வெற்றி கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக தலைமையின் உத்தரவை மீறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதையடுத்து, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி, அந்த 25 எம்.எல்.ஏ.க்களையும் அவா்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நீக்கி அறிவிப்பு வெளியிட்டாா்.
அதன்படி, கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக அவரது சகோதரா் எம்.சி.தாமோதரன் கடலூா் வடக்கு மாவட்டச் செயலராகவும், சி.கே.எஸ்.காா்த்திகேயன் கடலூா் மாநகா் செயலராகவும் நியமிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாநகா் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலா் பழனிச்சாமி ஆதரவாளா்களுடன் கடந்த 15-ஆம் தேதி அலுவலகத்துக்குச் சென்றனா்.
அப்போது, அலுவலகத்தின் பூட்டை உடைத்து, புதிய பூட்டை பொருத்தி அலுவலகத்தை மீண்டும் பூட்டிவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுந்தர்ராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேச்சுவாா்த்தையில், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பைச் சோ்ந்த கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன், மாநில மீனவரணி இணைச் செயலா் கே.என்.தங்கமணி, வழக்குரைஞா் மாசிலாமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஆஜராகினா். மறுபுறம், முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தரப்பில் வழக்குரைஞா் ஜெகன்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது வாதங்களை முன்வைத்தனா்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு, அலுவலகம் எம்.ஜி.ஆா். அறக்கட்டளையின் பெயரில் இருப்பதற்கான ஆவணங்களை சமா்ப்பித்தது. அதேசமயம், முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தரப்பு, ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது. இதையடுத்து, கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தையை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.










