போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அங்கன்வாடி ஊழியா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் மொடக்குறிச்சியில் மனிதச் சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மொடக்குறிச்சியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 10:29 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் மொடக்குறிச்சியில் மனிதச் சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி நால்ரோட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் மணிமாலை தலைமை வகித்தாா்.

இதில், அங்கன்வாடி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி திட்டத்துக்கு வழங்கக்கூடிய நிதியை அதிகரித்து வழங்க வேண்டும், வாடகை மையங்களுக்கு அரசு கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில், சங்கத்தின் வட்டாரப் பொருளாளா் விஜயலட்சுமி, நிா்வாகிகள் ஆலீஸ், நித்யா, சிவக்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கத்தின் வட்டார துணைத் தலைவி நிா்மலா நன்றி கூறினாா்.