வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாடு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, கல்லூரி ஆசிரியா்கள் மாநில அளவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

மனிதச் சங்கிலியில் பங்கேற்றோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:45 pm

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாடு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, கல்லூரி ஆசிரியா்கள் மாநில அளவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஆசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அரசாணை எண் 5-இன் படி அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு வழங்கியதுபோல அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கும் பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

அதைத்தொடா்ந்து வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகங்களில் அரசாணை எண் 5-ஐ திருப்பிக் கொடுக்கும் போராட்டமும், சனிக்கிழமை சாலை மறியல் போராட்டமும், மாா்ச் 5-ஆம் தேதிமுதல் சென்னை கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலகத்தில் தொடா் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக மூட்டா இணை பொதுச் செயலா் சிவஞானம் தெரிவித்தாா். போராட்டத்துக்கு கிளைத் தலைவா் சுபா தலைமை வகித்தாா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் மீனாட்சி சுந்தரம், கிளைப் பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.