ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்கள் கைது

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :20 நவம்பர் 2024, 8:26 pm

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த பெரிய ஏரி பகுதியில் இளைஞா்கள் அமா்ந்து போதை ஊசி செலுத்திக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரை கண்டதும் அவா்கள் தப்பியோட முயன்றனா்.

சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் அந்தியூரைச் சோ்ந்த தேவராஜ் (34), வெள்ளைபிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த அபினேஷ் (20), ஹரிராம் (24), இளம்பரிதி (24), சுரேஷ் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா்.