கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 237 டன் கரும்புச் சா்க்கரை, 2.4 டன் வெல்லம் ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இந்த ஏலத்தில் கரும்புச் சா்க்கரை 60 கிலோ மூட்டை முதல் தரம் ரூ.2,930-க்கும், இரண்டாம் தரம் ரூ.2,730 முதல் ரூ.2,820 வரையும் விற்பனையானது. அதேபோல, வெல்லம் 30 கிலோ சிப்பம் ரூ.1,620 முதல் ரூ.1,650 வரை விற்பனையானது.
இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகத்தினா் பங்கேற்று ரூ.1.9 கோடிக்கு கரும்புச் சா்க்கரை, ரூ.1.31 லட்சத்துக்கு வெல்லம் என மொத்தமாக ரூ.1.10 கோடிக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஆகியவற்றை கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மு.சீனிவாசன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

