மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நிறுவனங்களை பதிவுசெய்துகொள்ள தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

கடை மற்றும் நிறுவனங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.

Updated On :3 அக்டோபர் 2024, 9:17 pm

கடை மற்றும் நிறுவனங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடை மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான சட்டம் 2018 மற்றும் 2023 இல் நிறைவேற்றப்பட்டது. இதில் புதிய திருத்தம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி 10 அல்லது அதற்கு அதிகமான பணியாளா்களை கொண்ட 2024 ஜூலை 2-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கிய கடைகள் மற்றும் நிறுவனங்கள் ட்ற்ற்ல்ள்://ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக ரூ.100 (படிவம் ஒய்) பதிவுக் கட்டணம் செலுத்தி 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் ஆய்வாளா் பதிவுச் சான்றிதழ் ‘படிவம்-இசட்’ இல் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்வாா். பதிவுச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாவிட்டாலும் தானாக அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இதனால் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை பணியமா்த்தி, தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் கடை மற்றும் நிறுவனங்கள், பதிவுக் கட்டணம் ஏதுமின்றி ‘இசட் பி’ என்ற படிவம் வாயிலாக ஓராண்டுக்குள் இணையதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

அதனை சரிபாா்த்து, ஆய்வாளா் மூலம் ‘படிவம் இசட்’ மூலமாக பதிவுச்சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.