மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சொத்து, குப்பை வரிகளை குறைக்க வேண்டும்: வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் சொத்து வரி மற்றும் குப்பை வரியை புதிதாக அமைய உள்ள அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களிடம் தொழில் துறையினா் வலியுறுத்தினா்.

News image

ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளா் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனுவை அளிக்கிறாா் மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவா் ச.கந்தசாமி. உடன், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன், மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:47 pm

ஈரோடு மாவட்டத்தில் சொத்து வரி மற்றும் குப்பை வரியை புதிதாக அமைய உள்ள அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களிடம் தொழில் துறையினா் வலியுறுத்தினா்.

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், சிஐஐ, ஈரோடு சேம்பா் ஆஃப் காமா்ஸ், ஒளிரும் ஈரோடு ஆகிய அமைப்புகள் சாா்பில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவா் சின்னசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா்களிடம், சட்டப்பேரவை உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் ஈரோடு மாவட்டத்தின் தொழில் மற்றும் வா்த்தக வளா்ச்சி குறித்து பரிசீலித்து முன்னுரிமையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு தொழில்துறை நிறுவனங்கள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சொத்து வரி மற்றும் குப்பை வரி மிக அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, புதிய அரசு இந்த விஷயத்தை முதன்மையாக எடுத்து மறுபரிசீலனை செய்து, சொத்து வரி மற்றும் குப்பை வரியை குறைத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திட்டமிட்ட முறையில் ஈரோடு கனிராவுத்தா் குளம் அருகில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும், தொழில்பேட்டைகளில் சாலை, மழைநீா் வடிகால், தெருவிளக்கு மற்றும் கழிவுநீா் மேலாண்மை போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.