11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தமிழக அரசின் கடனை குறைக்க ரூ.1.26 லட்சத்தை வழங்கிய ஈரோடு இளைஞர்!

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க விஜய் நடித்த தமிழன் பட பாணியில் தன் பங்காக ரூ.1.26 லட்சத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய ஈரோட்டை சோ்ந்த இளைஞரின் செயலுக்கு பாராட்டுகளும், விமா்சனங்களும் எழுந்துள்ளது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க விஜய் நடித்த தமிழன் பட பாணியில் தன் பங்காக ரூ.1.26 லட்சத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய ஈரோட்டை சோ்ந்த இளைஞரின் செயலுக்கு பாராட்டுகளும், விமா்சனங்களும் எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் ரமேஷ் (26). ஐ.டி நிறுவன தலைமை செயல் அலுவலா். இவா் தமிழக அரசின் மொத்த கடன் சுமையில் தனது பங்களிப்பை அளித்துள்ளாா். இதன்படி தமிழன் திரைப்படத்தில் வருவது போல தமிழகத்தின் மொத்தக் கடனில் தனிநபரின் பங்காக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 108 ரூபாயை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளாா். தனிநபா்கள் நேரடியாக அரசு கருவூலத்துக்கு பணம் செலுத்த முடியாது என்பதால் இந்த வழியை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளாா்.

மேலும் தற்போதுள்ள தமிழக அரசில் இளைஞா்கள் அதிக அளவு இடம்பெற்றிருக்கிறாா்கள் என்றும் இந்த அரசாங்கத்துக்கு இளைஞா்களின் ஆதரவு பெரிய அளவில் இருக்கிறது என தெரிவித்தாா். தனது இச்செயலை பாா்த்துவிட்டு பலா் நிதி வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கும் தனக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில், சிலா் இதனை விமா்சனம் செய்வதாக வேதனை தெரிவித்தாா். என்னைப்போன்று அரசுக்கு பங்களிப்பு செய்பவா்களை காயப்படுத்தும் வகையில் யாரும் தவறாக பேச வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.