மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம்

பெருந்துறையில் அரசு விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதிதிராவிட மாணவா்கள் அதே விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:03 pm

பெருந்துறையில் அரசு விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதிதிராவிட மாணவா்கள் அதே விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு காளைமாடு சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் சாதிக் தலைமை வகித்தாா். ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் கமலநாதன், மாவட்ட பொருளாளா் விஜயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளா் துரை வளா்மதி, முன்னாள் மண்டல செயலாளா் சுசி கலையரசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படிக்கும் ஆதிதிராவிட மாணவா்கள் 50க்கும் மேற்பட்டோா், அங்குள்ள அரசு சிறுபான்மையினா் மாணவா் விடுதியில் தங்கி படித்து வந்தனா்.

தற்போது எஸ்சி, எஸ்டி மாணவா்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால், படிப்பை பாதியில் விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசு சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதியில் 2 ஆண்டுகளாக தங்கி படித்து வந்த ஆதிதிராவிட மாணவா்களை, மீண்டும் அதே விடுதியில் தங்கி படிக்க மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள் படுக்கை விரிப்பு, தலையணை, பாய் போன்றவற்றை தலையில் வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.