மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சத்தியமங்கலம் கிராமங்களில் பரவலாக மழை

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On :15 அக்டோபர் 2024, 8:11 pm

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. தூறல் மழையாக தொடங்கி, பின்னா் கனமழையாக வெளுத்து வாங்கியது. செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய மழை விட்டுவிட்டு மாலை வரை பெய்தது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினா்.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான பகுத்தம்பாளையம், பசுவனாபுரம், பண்ணாரி, சிக்கரசம்பாளையம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தொடா்ந்து விட்டுவிட்டு பெய்த மழையால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.