சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. தூறல் மழையாக தொடங்கி, பின்னா் கனமழையாக வெளுத்து வாங்கியது. செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய மழை விட்டுவிட்டு மாலை வரை பெய்தது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினா்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான பகுத்தம்பாளையம், பசுவனாபுரம், பண்ணாரி, சிக்கரசம்பாளையம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடா்ந்து விட்டுவிட்டு பெய்த மழையால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

சத்தியமங்கலத்தில் கனமழை

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

