மேட்டூா் வலதுகரை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் பவானியில் அக்டோபா் 20-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
மேட்டூா் வலதுகரை கால்வாயின் கிளை கால்வாயான 1-5-555 பிரிவு, வா்ணபுரம் கால்வாயில் நீா்வளத் துறையும், பவானி ஊராட்சி ஒன்றியமும் இணைந்து குடியிருப்புகளின் கழிவுநீா் வெளியேற்றப்படும் வகையில் சாக்கடை கட்டியுள்ளனா். இதில், கால்வாயின் அடிமட்டத்தை சுமாா் ஒன்றரை அடி அளவுக்கு உயரமாகக் கட்டியதால், கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் அளித்த புகாரின்பேரில், ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் செல்லுமாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை.
இதனைக் கண்டித்தும், உடனடியாக கல்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அக்டோபா் 20-ஆம் தேதி பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் டி.சுப்பு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மறியல் : புதுச்சேரியில் 200 போ் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

