மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோபி அருகே மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது.

News image

கோபி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த யானை.

Updated On :17 அக்டோபர் 2024, 12:16 am

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் இருந்து உணவு, குடிநீருக்காக வெளியேறும் யானைகள் அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து வீடுகளையும், பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கோபியை அடுத்த பங்களாபுதூரில் தனியாா் பொறியியல் கல்லூரிக்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு வந்த ஆண் யானை, அருகிலுள்ள விவசாய நிலம் மற்றும் கல்குவாரிக்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை உடைத்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.என்.பாளையம் வனத் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.