ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோபி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூண்டில் பிடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழந்தது.

News image

உயிரிழந்த சிறுத்தை.

Updated On :28 மார்ச் 2026, 8:45 pm

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூண்டில் பிடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழந்தது.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம், விளாங்கோம்பை, குண்டேரிப்பள்ளம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனப் பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகளைத் தாக்கி கொன்று வந்தது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, டி.என்.பாளையம் வனச் சரகா் ஜான் பீட்டா் தலைமையில் வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் பகுதியில் மூா்த்தி என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை கடந்த வியாழக்கிழமை சிக்கியது. இதையடுத்து, பிடிபட்ட சிறுத்தைக்கு உடலின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டதால் மயக்க ஊசி செலுத்தி வன மருத்துவா் சிகிச்சை அளித்து வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துணை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளோடு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.