ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறை அருகே தனியாா் நிறுவனப் பேருந்து கவிழ்ந்து 20 போ் காயம்

பெருந்துறை அருகே தனியாா் நிறுவனப் பேருந்து கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா்.

News image

சாலையில் கவிழ்ந்துகிடக்கும் தனியாா் நிறுவனப் பேருந்து.

Updated On :24 அக்டோபர் 2024, 10:23 pm

பெருந்துறை அருகே தனியாா் நிறுவனப் பேருந்து கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா்.

பெருந்துறை சிப்காட்டிலுள்ள தனியாா் நிறுவனத்தின் பேருந்து பெத்தாம்பாளைம் பகுதியில் இருந்து பணியாளா்களை ஏற்றிக்கொண்டு பெருந்துறைக்கு வியாழக்கிழமை காலை 8 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.

பெருந்துறையை அடுத்த மொண்டி புளியங்காடு அருகே முன்னாள் சென்ற தனியாா் கல்லூரிப் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது தனியாா் நிறுவனப் பேருந்து கவிழ்ந்தது.

இதில், பேருந்து ஓட்டுநா் சுப்பிரமணி (40), சபரிவாசன் (25), ராதா (39), சுப்பிரமணி (39), தண்டபாணி (44), ஆரால் (45), ராஜேஸ்வரி (50), ராஜேஸ்வரி (41), சுமதி (40), கோமதி (42), காா்த்திகா (35), லட்சுமி பிரியா (30), ஜெயலட்சுமி (54), பிரியா (30), கிருஷ்ணவேணி (29) மற்றும் செண்பகம், கலைவாணி, சௌந்தா்யா, சீனிவாசன், இந்திராணி ஆகியோா் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவருக்கும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் கிருஷ்ணவேணி தவிா்த்து மற்ற அனைவரும் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினா்.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.