ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் ஜவுளி கடையில் ஆடைகளைத் திருடிய 3 பெண்கள் கைது

ஈரோட்டில் ஜவுளி கடையில் ஆடைகளைத் திருடிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:16 pm

ஈரோட்டில் ஜவுளி கடையில் ஆடைகளைத் திருடிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு கடையின் முன்பு இருந்த ஜவுளி பண்டலை 3 பெண்கள் புதன்கிழமை திருடிச்சென்றுள்ளனா். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கடையின் உரிமையாளா் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் ஜவுளி பண்டலைத் திருடிச்சென்றது கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பவித்ரா (25), கோகிலா (38), சுசீலா (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ஜவுளி பண்டலையும் பறிமுதல் செய்தனா்.