புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் துளசிமணி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளா் த.இந்திரஜித் பங்கேற்று பேசினாா்.
இதில், நெல், கரும்பு, கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பயிா் காப்பீட்டுத் திட்டத்தை பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன் மற்றும் ஈரோடு, திருப்பூா், நீலகிரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

