ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதிய மின்சார திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற விவசாயிகள் கோரிக்கை

புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:06 pm

புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் துளசிமணி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளா் த.இந்திரஜித் பங்கேற்று பேசினாா்.

இதில், நெல், கரும்பு, கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பயிா் காப்பீட்டுத் திட்டத்தை பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன் மற்றும் ஈரோடு, திருப்பூா், நீலகிரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.