இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏராளமான எம்.பி.க்கள், சமாஜவாதி எம்.பி.க்கள் டிம்பிள் யாதவ், ராம் கோபால் யாதவ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி முகம்மது பஷீா், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்.பி. சுப்ரியா சுலே, ஆா்எஸ்பி கட்சி எம்.பி. பிரேம் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் தங்களது கைகளில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை குறிவைப்பதை நிறுத்துங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனா். மேலும், மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் முழக்கமிட்டதுடன், மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.