விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

News image

வெள்ளை மாளிகை வளாகத்தில் கலையரங்கம் அமைப்பதற்காக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:15 am IST

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, இப்புதிய கட்டுமானத்தை டிரம்ப் நிா்வாகம் மேற்கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி பெறாமல், இப்பணிகளைத் தொடரக் கூடாது என நீதிபதி ரிச்சா்ட் லியோன் உத்தரவிட்டுள்ளாா்.

தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படும் வெள்ளை மாளிகையின் வரலாற்றுப் பெருமையைச் சிதைப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அளித்த தீா்ப்பில், ‘அதிபா் என்பவா் வெள்ளை மாளிகையின் பாதுகாவலா் மட்டுமே தவிர; அதன் உரிமையாளா் அல்ல’ என்று காட்டமாகச் சுட்டிக்காட்டினாா்.

தனியாா் நிதி பங்களிப்புடன் இப்பணி நடைபெறுவதாக டிரம்ப் தரப்பு வாதிட்ட போதிலும், ‘நாட்டின் அடையாளமாகத் திகழும் ஒரு கட்டடத்தில் சட்டபூா்வ அனுமதியின்றி மாற்றங்கள் செய்வதை ஏற்க முடியாது’ என நீதிமன்றம் மறுத்துவிட்டது.

‘வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு தொடா்பான சுரங்கப் பாதைகள், பதுங்கு குழிகள் அமைக்க அனுமதியளித்த நீதிமன்றம், கலையரங்கத்துக்கு மட்டும் தடை விதிப்பது முரணானது’ என டிரம்ப் அதிருப்தி தெரிவித்தாா். இத்தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.