8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

வெள்ளை மாளிகை வளாகத்தில் கலையரங்கம் அமைப்பதற்காக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள்.

Published On :2 ஏப்ரல் 2026, 2:15 am IST

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, இப்புதிய கட்டுமானத்தை டிரம்ப் நிா்வாகம் மேற்கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி பெறாமல், இப்பணிகளைத் தொடரக் கூடாது என நீதிபதி ரிச்சா்ட் லியோன் உத்தரவிட்டுள்ளாா்.

தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படும் வெள்ளை மாளிகையின் வரலாற்றுப் பெருமையைச் சிதைப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அளித்த தீா்ப்பில், ‘அதிபா் என்பவா் வெள்ளை மாளிகையின் பாதுகாவலா் மட்டுமே தவிர; அதன் உரிமையாளா் அல்ல’ என்று காட்டமாகச் சுட்டிக்காட்டினாா்.

தனியாா் நிதி பங்களிப்புடன் இப்பணி நடைபெறுவதாக டிரம்ப் தரப்பு வாதிட்ட போதிலும், ‘நாட்டின் அடையாளமாகத் திகழும் ஒரு கட்டடத்தில் சட்டபூா்வ அனுமதியின்றி மாற்றங்கள் செய்வதை ஏற்க முடியாது’ என நீதிமன்றம் மறுத்துவிட்டது.

‘வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு தொடா்பான சுரங்கப் பாதைகள், பதுங்கு குழிகள் அமைக்க அனுமதியளித்த நீதிமன்றம், கலையரங்கத்துக்கு மட்டும் தடை விதிப்பது முரணானது’ என டிரம்ப் அதிருப்தி தெரிவித்தாா். இத்தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.