ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது பற்றி...

News image

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 11:14 am IST

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

மூலதன ஆதாய வரி 12.5 சதவிகிதத்தையும், வட்டி வருமானத்தின் மீதான பிடித்த வரி 20 சதவிகிதத்தையும் முற்றிலும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”அரசுப் பத்திரச் சந்தையை ஆழப்படுத்தவும், பங்குப் பிரிவில் அதிக வெளிநாட்டு நிறுவன முதலீட்டை ஈர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நிய செலாவணி மேலாண்மை (கடன் அல்லாத பத்திரங்கள்) மூன்றாவது திருத்த விதிகள், 2026-ஐ பொருளாதார விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) செய்யும் முதலீடுகளுக்குப் பொருந்தக்கூடிய வரி விதிப்பு முறையை முறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அத்தகைய முதலீடுகளுக்கு வட்டி மற்றும் மூலதன ஆதாயத்தின் மீதான வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வரி விலக்கானது, 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது. அதாவது, அரசுப் பத்திரங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு செய்யப்பட்ட முதலீடுகளுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும்.

மேலும், இந்தியப் பங்குச் சந்தைகளில் அதிக மற்றும் நிலையான வெளிநாட்டு முதலீட்டு வரவுகளுக்கு இது ஆதரவளிக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Full tax exemption for foreign investors in government bonds - Central Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.