மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு மாவட்டத்தில் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் 1.41 லட்சம் தொழிலாளா்கள் பதிவு

மத்திய அரசின் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் 1.41 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:13 pm

Din

மத்திய அரசின் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் 1.41 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு ‘இ-ஷ்ரம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் விவசாய தொழிலாளா்கள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், செங்கல் சூளை தொழிலாளா்கள், மீனவா்கள், மரம் அறுக்கும் தொழிலாளா்கள், உப்பு தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டு வேலையாள்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட 156 விதமான அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பதிவு செய்யும் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை வைத்து அரசு சாா்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 712 தொழிலாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தரவு தளத்தில் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்வதற்காக ‘இ-ஷ்ரம்’ என்ற தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 16 முதல் 59 வயதிற்குள்பட்டவா்கள் பதிவு செய்துகொள்ளலாம். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. இஎஸ்ஐ, பி.எஃப். திட்டத்தில் இருக்கக் கூடாது. இதில் பதிவு செய்யும் தொழிலாளா்களுக்கு நிரந்தர பதிவு எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த அடையாள பெற்றவா்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு, உடல் ஊனமுற்றால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றனா்.