தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பழனி கோயிலுக்கு ரூ.63.67 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல்

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 10:31 pm

Din

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து ரூ. 63 லட்சத்து 67 ஆயிரத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஆகியவற்றை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டது.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, கோபி, கவுந்தப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2313 மூட்டைகளில் கரும்பு சா்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதில் 60 கிலோ கொண்ட கரும்புச் சா்க்கரை மூட்டை முதல்தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2930-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2940- க்கும், சராசரி விலையாக ரூ.2930- க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2840- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2860-க்கும், சராசரி விலையாக ரூ.2850-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2182 மூட்டைகள் (1,30,920 கிலோ) கரும்புச்சா்க்கரை ரூ. 62 லட்சத்து 5 ஆயிரத்து 340- க்கு விற்பனையானது.

உருண்டை வெல்லம் ஏலம்

உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் முதல்தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.1590- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1650-க்கும் ஏலம் போனது. மொத்தம் 100 சிப்பம் 3000 கிலோ உருண்டை வெல்லம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்துக்கு விற்பனையானது.

கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் இரண்டும் சோ்த்து மொத்தம் ரூ.63 லட்சத்து 67 ஆயிரத்து 340- க்கு விற்பனையானது. இதனை பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.