சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு 2,300 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. செண்பகபுதூா் வாய்க்காலில் இருகரைகளை தொட்டிபடி தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாய்க்காலில் குளிப்பது வழக்கம்.
இந்நிலையில், திருப்பூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செந்தில்குமாா் (43), சுமைதூக்கும் தொழிலாளா்களுடன் செண்பகபுதூா் வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்தனா். செந்தில்குமாா் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இது குறித்து தொழிலாளா்கள் புன்செய் புளியம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய செந்தில்குமாரின் உடலை மீட்டனா்.
இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இருமத்தூா் ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
