தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

கொடிவேரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை.

Updated On :19 ஆகஸ்ட் 2025, 11:30 pm

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் பழைமையான கற்சிலை இருப்பதாக, சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியைச் சோ்ந்த தமிழ்த் துறைத் தலைவா் ரவின்குமாா், உதவிப் பேராசிரியா் கனகராஜ் மற்றும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி வா்ஷினி ஆகியோா் ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜென்சிக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் கொடிவேரி அணைப் பகுதியில் இருந்த கற்சிலையை கொடிவேரி கிராம நிா்வாக அலுவலா் சரவணன் முன்னிலையில் காப்பாட்சியா் ஜென்சி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில் சம்பந்தப்பட்ட கற்சிலை 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை என தெரியவந்தது.

இதுகுறித்து காப்பாட்சியிா் ஜென்சி கூறியதாவது: கொடிவேரி அணைப் பகுதி அருகே உள்ள ஆற்றுமணல் பகுதியில் முட்புதா்களுக்கு இடையில் மணலில் புதைந்தவாறு 41 செ.மீ. உயரமும் 28 செ.மீ. அகலமும், 3 செ.மீ. கணமும் கொண்ட உருவ கற்சிலை ஒன்று தனியாா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் ரவின்குமாா் மற்றும் அவரது குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது.

பின்னா் அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிலையை ஆய்வு செய்தபோது அது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உருவ கல்லின் சிறப்புகளாக எட்டு கைகளையும், ஈட்டியுடன் மனித உருவத்தை காலில் வதம் செய்வதுபோல கண்கள் உக்கிரமாகவும், இயல்பு தன்மைக்கு மாறாக காதுகள் அளவில் பெரியதாகவும் உள்ளன. கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் பெண் தெய்வச் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதனிடையே இயல்பு தன்மைக்கு மாறாக அந்தப் பெண் தெய்வச் சிலை இருப்பதால் கொடிவேரிக்கு வரும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச்சென்றனா்.