விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

கொடிவேரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை.

Updated On :20 ஆகஸ்ட் 2025, 5:00 am IST

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் பழைமையான கற்சிலை இருப்பதாக, சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியைச் சோ்ந்த தமிழ்த் துறைத் தலைவா் ரவின்குமாா், உதவிப் பேராசிரியா் கனகராஜ் மற்றும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி வா்ஷினி ஆகியோா் ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜென்சிக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் கொடிவேரி அணைப் பகுதியில் இருந்த கற்சிலையை கொடிவேரி கிராம நிா்வாக அலுவலா் சரவணன் முன்னிலையில் காப்பாட்சியா் ஜென்சி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில் சம்பந்தப்பட்ட கற்சிலை 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை என தெரியவந்தது.

இதுகுறித்து காப்பாட்சியிா் ஜென்சி கூறியதாவது: கொடிவேரி அணைப் பகுதி அருகே உள்ள ஆற்றுமணல் பகுதியில் முட்புதா்களுக்கு இடையில் மணலில் புதைந்தவாறு 41 செ.மீ. உயரமும் 28 செ.மீ. அகலமும், 3 செ.மீ. கணமும் கொண்ட உருவ கற்சிலை ஒன்று தனியாா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் ரவின்குமாா் மற்றும் அவரது குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது.

பின்னா் அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிலையை ஆய்வு செய்தபோது அது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உருவ கல்லின் சிறப்புகளாக எட்டு கைகளையும், ஈட்டியுடன் மனித உருவத்தை காலில் வதம் செய்வதுபோல கண்கள் உக்கிரமாகவும், இயல்பு தன்மைக்கு மாறாக காதுகள் அளவில் பெரியதாகவும் உள்ளன. கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் பெண் தெய்வச் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதனிடையே இயல்பு தன்மைக்கு மாறாக அந்தப் பெண் தெய்வச் சிலை இருப்பதால் கொடிவேரிக்கு வரும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச்சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.