கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா்.
கடந்த ஏப்ரல் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதாலும் ஒரு மாதத்துக்கு மேலாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனா்.
அதன்படி விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணைக்கு ஞாயிற்றுகிழமை காலை முதல் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்தனா்.
குறைந்த அளவு தண்ணீா் வெளியேறிய நிலையிலும் குழந்தைகளுடன் உற்சாகமாக குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனா்.
கொடிவேரி அணையில் ரூ.5 நுழைவுக் கட்டணத்தில் அருவியில் நீண்ட நேரம் குளித்தும் பரிசல் சவாரிக்கு தனி கட்டணத்தில் பரிசல் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் பள்ளி குழந்தைகளுடன் கோடை விடுமுறையுடன் ஞாயிறு விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக கழித்து சென்றனா்.
தொடர்புடையது

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடிவேரி அணைப் பகுதியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்! தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏமாற்றம்!!

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



