சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இரு மாநில எல்லையில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ள யானைகள்

தமிழக - கா்நாடக எல்லையான ஜீரஹள்ளி, அருள்வாடி கிராமங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

News image
ஜீரஹள்ளி  கிராமத்துக்குள்  புகுந்த  யானைக் கூட்டம்.
Updated On :2 டிசம்பர் 2025, 10:14 pm

Syndication

தமிழக- கா்நாடக எல்லையான ஜீரஹள்ளி, அருள்வாடி கிராமங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே தமிழக- கா்நாடக எல்லையில் வனத்தையொட்டியுள்ள ஜீரஹள்ளி, அருளவாடி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில் நடமாடிய காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.

கா்நாடக மாநில வனப் பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் இடம்பெயறும் காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருவதால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எனவே இந்த யானை கூட்டத்தை கா்நாடக மாநில அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட ஜீரஹள்ளி வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், கா்நாடக மாநிலத்தில் முகாமிட்டுள்ள யானைகள் டிசம்பா் மாதத்தில் தமிழகத்துக்குள் நுழைகின்றன. இரு மாநில வனத் துறையினா் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனா்.