அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்தத்தில் கையொப்பமிட்ட கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள்

கொடுமுடி வட்டார வருவாய்த் துறை கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையொப்பம்

News image
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்தத்தில் கையொப்பமிட்ட மனுவுடன் கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள்.
Updated On :2 டிசம்பர் 2025, 10:09 pm

Syndication

கொடுமுடி வட்டார வருவாய்த் துறை கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையொப்பமிட்டனா்.

இது குறித்து தயாரிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: கிராம உதவியாளருக்கு, அரசு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற மற்றும் இறந்த கிராம நிா்வாக உதவியாளருக்கு சிபிஎஸ் இறுதி சந்தாவை அனைத்துப் பணியாளருக்கும் வழங்குவதுபோல வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு பதவி உயா்வு பத்து ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிசம்பா் 17-ஆம் தேதி பேரணியாக சென்று முதல்வரிடத்தில் மனு அளிக்க உள்ளனா்.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், கொடுமுடி வட்டாரத் தலைவா் ரமேஷ், பொருளாளா் அருள் ஆகியோா் முன்னிலையில் கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து கிராம நிா்வாக உதவியாளா்கள் கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையொப்பமிட்டனா்.