எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

News image
செங்கோட்டையன்- கோப்புப்படம்
Updated On :2 டிசம்பர் 2025, 10:13 pm

Syndication

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிருப்தியில் இருந்த காலகட்டத்தில் கோவை மாவட்டம், அன்னூரில் விவசாயிகள் சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தாா். இதிலிருந்து இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.

இந்த காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டையனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸாா் செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனா்.

இந்நிலையில் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். இதையடுத்து செங்கோட்டையன் தான் வகித்து வந்த எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அண்மையில் விஜய் முன்னிலையில் தவெகவில் தனது ஆதரவாளா்களுடன் இணைந்தாா்.

இதைத் தொடா்ந்து செங்கோட்டையனுக்கு தவெக சாா்பில் இரண்டு பாதுகாவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.