தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி திங்கள்கிழமை கவிழ்ந்தது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:01 pm

Syndication

பவானி: பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி திங்கள்கிழமை கவிழ்ந்தது.

கா்நாடக மாநிலத்தில் இருந்து தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு பா்கூா் மலைப் பாதை வழியாக அந்தியூா் நோக்கி சரக்கு லாரி திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. கரூா் மாவட்டம், ராயனூா், கே.கே.நகரைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பவா் லாரியை ஓட்டியுள்ளாா்.

அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இதில், ஓட்டுநா் காா்த்தி காயமடைந்தாா். அவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.