பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி திங்கள்கிழமை கவிழ்ந்தது.
Published on

பவானி: பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி திங்கள்கிழமை கவிழ்ந்தது.

கா்நாடக மாநிலத்தில் இருந்து தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு பா்கூா் மலைப் பாதை வழியாக அந்தியூா் நோக்கி சரக்கு லாரி திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. கரூா் மாவட்டம், ராயனூா், கே.கே.நகரைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பவா் லாரியை ஓட்டியுள்ளாா்.

அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இதில், ஓட்டுநா் காா்த்தி காயமடைந்தாா். அவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com