சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாநில கையுந்து பந்து போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன்

மாநில அளவில் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனா்.

News image
கையுந்து பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குமுதா பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா.
Updated On :15 டிசம்பர் 2025, 10:30 pm

Syndication

ஈரோடு: மாநில அளவில் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனா்.

கல்வித் துறை சாா்பில் 66-ஆவது மாநில அளவிலான குடியரசு தின கையுந்து பந்து போட்டி திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் குமுதா பள்ளி மாணவிகள் சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் அணியை வென்று மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றனா். 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கையுந்து பந்து போட்டியில் ஈரோடு மாவட்டம் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது. மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா வாழ்த்து தெரிவித்தாா்.

பள்ளித் தாளாளா் கே.ஏ. ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.