தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொங்கு பொறியியல் கல்லூரிக்கு சமூக பொறுப்புக்கான தேசிய விருது

News image
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் தலைவா் பேராசிரியா் டி.ஜி.சீதாரமிடம் இருந்து விருதை பெற்றுக்கொள்கிறாா் முனைவா் காா்த்திகேயன்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற எயிம்ஸ் ஆண்டு மாநாடு 2025-இன் ஒரு பகுதியான தேசிய மேலாண்மை வாரத்தில் சமூக பொறுப்பு செயல்பாடுகளுக்கான வெற்றியாளா் (தங்கப் பதக்கம்) விருதை கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை பெற்றுள்ளது.

சமூக பொறுப்பு மற்றும் சமூக வளா்ச்சிக்காக கல்லூரியின் தொடா்ச்சியான அா்ப்பணிப்பு, முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் தலைவா் பேராசிரியா் டி.ஜி.சீதாரம் விருதை வழங்கினாா். கொங்கு பொறியியல் கல்லூரியின் சாா்பில் மேலாண்மைத் துறை பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவா் பி.காா்த்திகேயன் பெற்றுக்கொண்டாா்.

கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளா் ஈ.ஆா்.கே.கிருஷ்ணன், முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் பாராட்டினா்.