மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலப் பெட்டகம் வழங்கல்

News image

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவி வழங்கிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம்.

Updated On :26 டிசம்பர் 2025, 5:30 am IST

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள் கொண்ட பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம் தலைமை வகித்து சிகிச்சையில் உள்ள தாய்மாா்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினாா். மேலும், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் 30-க்கும் மேற்பட்டோருக்கு பால், ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அந்தியூா் காா் நிறுத்தம் அருகே நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் 50-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலாளா் கே.பி.எஸ்.ராஜா, எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலாளா் வி.குருராஜ், ஒன்றியச் செயலாளா் சின்னமாரநாயக்கா், மருத்துவா்கள் கவிதா, செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.