24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலப் பெட்டகம் வழங்கல்

News image

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவி வழங்கிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம்.

Updated On :25 டிசம்பர் 2025, 9:28 pm IST

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள் கொண்ட பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம் தலைமை வகித்து சிகிச்சையில் உள்ள தாய்மாா்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினாா். மேலும், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் 30-க்கும் மேற்பட்டோருக்கு பால், ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அந்தியூா் காா் நிறுத்தம் அருகே நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் 50-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலாளா் கே.பி.எஸ்.ராஜா, எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலாளா் வி.குருராஜ், ஒன்றியச் செயலாளா் சின்னமாரநாயக்கா், மருத்துவா்கள் கவிதா, செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.