கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்து முன்னணி அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு

இந்து முன்னணி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

இந்து முன்னணி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு சின்னசடையம்பாளையம் பகுதியில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது.

வியாழக்கிழமை இரவு 11.30 முதல் 1 மணிக்குள் அவ்வழியாக சென்ற மா்ம நபா்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு பெட்ரோல் கேனை அங்கேயே வீசிச் சென்றுள்ளனா். அப்பகுதியைச் சோ்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலா் காா்த்தி, இடத்தின் உரிமையாளா் சக்திவேல் ஆகியோா் தீயை அணைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் சக்திவேல் மனைவி மற்றும் மைத்துனருக்கு சொந்தமானவை. சம்பவ இடத்தை ஏடிஎஸ்பி விவேகானந்தன் ஆய்வு செய்தாா். ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.