6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுக் கல்லூரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: பொதுமக்கள் எதிா்ப்பு

கொமாரபாளையம் ஊராட்சியில் அரசுக் கல்லூரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
அரசு  கல்லூரி அருகே  கொட்டப்பட்ட  மருத்துவக் கழிவுகளைப் பாா்வையிடும் பொதுமக்கள்.
Updated On :27 டிசம்பர் 2025, 8:01 pm

Syndication

சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் ஊராட்சியில் அரசுக் கல்லூரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்திரா நகா் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மாதிரி பள்ளி பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் கொட்டப்படுகிறது.

இதற்கிடையே ஊராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பாா்த்தபோது மருந்து, மாத்திரைகள் அடங்கிய அட்டை பெட்டிகள் இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். குப்பை கொட்டும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினா்.

இதற்கிடையே இது தொடா்பான புகைப்படம் மற்றும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இது குறித்து சத்தியமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் அா்த்தநாரீஸ்வரன் சனிக்கிழமை கூறியதாவது: அரசு கல்லூரி பின்புறம் குப்பை கொட்டும் இடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினோம்.

தூய்மைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனையில் குப்பைகள் சேகரிக்கும்போது மருந்து மாத்திரைகள் போட பயன்படுத்தும் அட்டை பெட்டிகள் மட்டும் சேகரித்து கொண்டு வந்து குப்பை கொட்டும் இடத்தில் கொட்டியுள்ளனா். அதில் மருந்து மாத்திரைகள் ஏதும் இல்லை. இனிமேல் அரசு மருத்துவமனையில் குப்பைகள் சேகரிக்கும் போது மருந்து மற்றும் மாத்திரைகள் போட பயன்படுத்தும் அட்டை பெட்டிகளையும் தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்றாா்.