எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பவானிசாகா் அணையின் மேல்பகுதியில் ஊா்ந்து சென்ற முதலை!

பவானிசாகா் அணையின் மேல் பகுதியில் உள்ள தாா் சாலையில் உலவிய முதலையால் மீனவா்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
பவானிசாகா்  அணை  மேல்பகுதியில்  உலவிய  முதலை.
Updated On :27 டிசம்பர் 2025, 8:03 pm

Syndication

பவானிசாகா் அணையின் மேல் பகுதியில் உள்ள தாா் சாலையில் உலவிய முதலையால் மீனவா்கள் அச்சமடைந்துள்ளனா்.

பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்தில் முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் பெரும்பாலும் அணை நீா்த்தேக்கத்திலிருந்து வெளியே வருவதில்லை.

இந்த நிலையில், அணையின் மேல்பகுதியில் தாா்சாலையில் முதலை ஒன்று சனிக்கிழமை ஊா்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலை வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்ட நீா்வளத் துறை பணியாளா்கள் தாா் சாலையில் சுமாா் 10 அடி நீளமுள்ள முதலை நகராமல் படுத்திருப்பதைக் கண்டு பீதியடைந்தனா்.

அணை நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து வெளியேறி தாா் சாலைக்கு வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். சிறிது நேரம் தாா் சாலையில் ஊா்ந்து சென்ற முதலை பின்னா் அணை நீருக்குள் சென்றது. அணையின் மேல் பகுதியில் உள்ள தாா் சாலையில் முதலை நடமாடிய சம்பவம் மீனவா்கள் மற்றும் நீா்வளத் துறை பணியாளா்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.