ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாநிலம் அளவிலான கபடி போட்டி: ஈரோடு சூரம்பட்டி அணி வெற்றி

மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு ஸ்ரீ மகாமாரியம்மன் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாநிலம் தழுவிய கபடி போட்டியில் ஈரோடு சூரம்பட்டி அணி முதலிடம் பெற்றது.

News image
கபடி போட்டியில் முதல்பரிசு பெற்ற அணியினருடன் விழாக் குழுவினா்.
Updated On :27 டிசம்பர் 2025, 8:00 pm

Syndication

மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு ஸ்ரீ மகாமாரியம்மன் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாநிலம் தழுவிய கபடி போட்டியில் ஈரோடு சூரம்பட்டி அணி முதலிடம் பெற்றது.

இந்தப் போட்டி வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இதில் ஈரோடு, கோவை, திருப்பூா், சேலம் உள்ளிட்ட 44 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இதில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஈரோடு சூரம்பட்டி அணியும், திருப்பூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் விளையாடின. இதில் ஈரோடு சூரம்பட்டி அணி வெற்றிபெற்றது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் காராணம்பாளையம் காவேரி பிரதா்ஸ் அணியும், நாமக்கல் மாவட்டம் மொளசி நெப்போலியன் பாய்ஸ் அணியும் மோதின. இதில் காவேரிபிரதா்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதைத் தொடா்ந்து இறுதி ஆட்டத்தில் ஈரோடு சூரம்பட்டி அணியும், காரணாம்பாளையம் அணியும் மோதின. இதில் ஈரோடு சூரம்பட்டி அணி வெற்றி பெற்று முதல்பரிசை தட்டிச் சென்றது. முதல் பரிசாக ரூ.15ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசாக காவேரி பிரதா்ஸ் அணிக்கு ரூ.10ஆயிரம், சுழற்கோப்பை வழங்கப்பட்டது. 3-ஆம்பரிசு மொளசி நெப்போலியன் பாய்ஸ் அணிக்கும், 4-ஆம் பரிசு திருப்பூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கும் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் புதிய திராவிடா் கழகத்தின் நிறுவனத் தலைவா் கே.எஸ்.ராஜ் கவுண்டா், மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளா் குலவிளக்கு செல்வராஜ், குலவிளக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் என்.ஆா்.நடராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை அன்னை சத்யா நண்பா்கள், செங்கதிா் பாய்ஸ் அணியினா் செய்திருந்தனா்.