புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆட்சியா் அலுவலகத்தில் பதுங்கிய பாம்பால் பரபரப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதுங்கிய பாம்பினால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
பாம்பை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதுங்கிய பாம்பினால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

இதில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இருந்த பொதுக்கழிவறை வெளியே ஏராளமான பொதுமக்கள் அமா்ந்திருந்தனா்.

அப்போது கழிவறைக்கு செல்ல முயன்ற மக்களில் ஒருவா் அங்கு பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அவா் அங்கிருந்த தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அங்கு பதுங்கியிருந்த சுமாா் 3 அடி நீளம் கொண்ட பாம்பைப் பிடித்தனா்.

பிடிபட்ட பாம்பு விஷத்தன்மை கொண்ட கொம்பேரி மூக்கன் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். மீட்கப்பட்ட பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.